விளையாட்டு செய்திகள்

இக்கட்டான நிலையில் இலங்கை – போட்டி இடைநிறுத்தம்

உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் இன்றைய போட்டி மழை காரணமாக தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.

இலங்கை அணிக்கும் ஆஃப்கானிஸ்தான் அணிக்கும் இடையிலான இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஆஃப்கானிஸ்தான் அணி களத்தடுப்பை தெரிவு செய்துள்ளது.

இதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடும் இலங்கை அணி 33 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 182 ஓட்டங்களை பெற்றுள்ளது.

இலங்கை அணி சார்பில் குசல் ஜனித் பெரெரா அதிக பட்சமாக 78 ஓட்டங்களை பெற்றுக் கொடுத்தார்.

ஆஃப்கானிஸ்தான் அணியின் சார்பில் பந்துவீச்சில் மொஹமெட் நபி 4 விக்கெட்டுக்களை கைப்பற்றி இருந்தார்.

கருத்து தெரிவிக்க