உள்நாட்டு செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவைவடக்கு செய்திகள்

வவுனியா புதூரில் விபத்தில் சிக்கி மூவர்காயம்

வவுனியா புதூரில் விபத்தில் சிக்கி மூவர் காயமடைந்த நிலையில் வவுனியா பொது வைத்தியசாலையில் சிக்கிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வவுனியா புதூர் நாகதம்பிரான் ஆலயத்தின் வருடாந்த பொங்கல் விழா இன்று சிறப்பாக இடம்பெற்று வரும் நிலையில் இரவு 7.40 மணியளவில் ஆலயத்திற்கு செல்லும் வீதியில் இவ் விபத்து ஏற்பட்டுள்ளது.

முச்சக்கரவண்டியொன்றுடன் வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் மோதியதிலேயே இவ் விபத்து ஏற்பட்டுள்ளது.

இதன்போது மோட்டார் சைக்கிளில் பயணித்த வயோதிபர் படு காயமடைந்து நிலையிலும் முச்சக்கர வண்டியில் பயணித்த பெண்ணொருவர் உட்பட இருவரும் காயமடைந்த நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

மோட்டார் சைக்களில் பயணித்தவர்கள் மதுபோதையில் இருந்ததாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்தள்ள நிலையில் விபத்து குறித்து புளியங்குளம் பொலிஸார் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.

கருத்து தெரிவிக்க