உள்நாட்டு செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவைமலையகச் செய்திகள்

கண்டி நகரில் பூரண கடையடைப்பு இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்தன தேரரினால் தலதா மாளிகைக்கு முன்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்கும் முகமாக கண்டி நகரம் முழுவதுமட் இன்று வர்த்தக நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளதாக கண்டி சிங்கள வர்த்தக முன்னணியின் செயலாளர் வஜிர கீர்த்தி தெரிவித்துள்ளார்.

இன்று காலை 9.00 மணிக்கு சிங்கள வர்த்தக முன்னணியில் அங்கம் வகிக்கும் வர்த்தகர்கள் முன்னணியின் தலைமை அலுவலகத்தில் இருந்து நடைபயணமாக ரத்தன தேரர் உண்ணாவிரதம் மேற்கொள்ளும் இடத்திற்கு சென்றுள்ளனர்.

இதேவேளை இந்த கடையடைப்புக்கு தமிழ் வர்த்தகச் சங்கமும் ஒத்துழைப்பு வழங்குவதாக தெரிவித்துள்ளதாக கண்டி சிங்கள வர்த்தக முன்னணி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க