உள்நாட்டு செய்திகள்

ரத்ன தேரரை பேராயர் ரஞ்சித் ஆண்டகை சந்தித்தார்!

உண்ணாவிரத போராட்டத்தை முன்னெடுத்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர் அதுரெலிய ரத்ன தேரரை பேராயர் கத்ரினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை சந்தித்துள்ளார்.

கண்டி தலதா மாளிகைக்கு முன்னால் கடந்த மூன்று நாட்களாக இந்தப் போராட்டத்தை முன்னெடுத்து வரும் ரத்ன தேரரை இன்று 3ஆம் திகதி திங்கட்கிழமை பேராயர் சந்தித்தார்.

அமைச்சர் ரிஷாட் பதுயூதின், ஆளுநர்களான ஆசாத் சாலி மற்றும் ஹிஸ்புல்லா ஆகியோரை பதவி நீக்கம் செய்வது உள்ளிட்ட நான்கு அம்ச கோரிக்கைகளை முன்வைத்து ரத்ன தேரர் போராட்டம் நடத்தி வருகின்றார்.

இந்தப் போராட்டத்துக்கு தற்போது ஆதரவு தெரிவிக்கும் வகையில் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் போராட்டங்கள் மற்றும் எதிர்ப்புக்கள் வெளியிடப்பட்டு வருகின்றன.

அங்கு சென்றுள்ள அவர், ரத்தன தேரரின் கோரிக்கையை தாம் ஆதரிப்பதாகவும், அதற்கு பூரண ஒத்துழைப்பு வழங்குவதாகவும் கத்தோலிக்க திருச்சபையின் பேராயர் கார்டினல் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க