புதியவைவெளிநாட்டு செய்திகள்

ஆப்கானிஸ்தானில் தொடர் வெடிகுண்டு தாக்குதல்-இருவர் பலி

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் நடத்தப்பட்ட தொடர் வெடிகுண்டு தாக்குதலில் இருவர் உயிரிழந்துள்ளனர்.17 பேர் காயமடைந்துள்ளனர்.

காயம் அடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

காபுலின் மேற்கு பகுதியில் உள்ள கல்லூரி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் மூன்று கண்ணி வெடிகுண்டுகள் வெடித்துள்ளன.

இந்த தாக்குதலுக்கு எந்தஒரு பயங்கரவாத இயக்கமும் இதுவரையில் பொறுப்பு ஏற்கவில்லை.

ஆப்கானிஸ்தானில் தொடர்ந்து தாக்குதல் நடத்திவரும் தலிபான் பயங்கரவாதிகளுடன் அமெரிக்கா அமைதி பேச்சுவார்த்தையை மேற்கொண்டு வருகிற போதும் பயங்கரவாத தாக்குதல்கள் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றன.

கருத்து தெரிவிக்க