உள்நாட்டு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்வடக்கு செய்திகள்

உயிா்த்த ஞாயிறு தற்கொலை தாக்குதல் திட்டமிட்ட சதி: ரணில்

உயிா்த்த ஞாயிறு தற்கொலை தாக்குதல் சம்பவங்கள் திட்டமிட்ட சதி என்றே நான் கூறவிரும்கிறேன் என பிரதமா் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

சமுர்த்தி பயனாளிகளுக்கான உரித்து பத்திரம் வழங்கும் நிகழ்வு இன்று காலை யாழ்.மாநகரசபை மைதானத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இதனைக் கூறியுள்ளாா்.

நாட்டில் இனங்களுக்கிடையில் மோதலை உருவாக்கி ஆட்சியை பிடிக்கலாம் என சிலா் முயற்சித்துக் கொண்டிருப்பதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

தீவிரவாதத்தை ஒழிக்க சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் ஒன்றிணைய வேண்டும். நாட்டில் தற்போது பாதுகாப்பு சூழல் நன்றாக இருக்கின்றது எனவும் பிரதமர் தெரிவித்தார்.

இந்த தாக்குதல்களின் பின்னணியில் குழு ஒன்று உள்ளமையை நாங்கள் விசாரணைகள் ஊடாக அறிந்துள்ளோம். அத்துடன் பல திட்டம் தீட்டப்பட்ட தாக்குதல் சம்பவங்கள் தடுக்கப்பட்டதாகவும் பிரதமா் ரணில் விக்கிரமசிங்க கூறினார்.

கருத்து தெரிவிக்க