உள்நாட்டு செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவைவடக்கு செய்திகள்

பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் வவுனியாவிற்கு ஆயர் வருகை

வவுனியா புதியசின்னபபுதுக்குளம் பற்றி மாதா தேவாலயத்தில் இடம்பெற்ற உறுதி பூசை நிகழ்விற்கு மன்னார் மறை மாவட்ட ஆயர் பேரருட் கலாநிதி இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை கலந்து கொண்டார்.
இன்று காலை 8.00மணியளவில் இடம்பெற்ற உறுதி பூசுதல் நிகழ்வில் ஆயரினால் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டதுடன் விசேட ஆரதானைகளும் இடம்பெற்றிருந்தன.
இதன் போது இப்பங்கை சேர்ந்த சுமார் ஐம்பதுக்கு மேற்பட்ட மாணவ மாணவிகளுக்கு உறுதி புசுதல் அருள்சாதனம் வழங்கி ஆயரினால் வழங்கி வைக்கப்பட்டிருந்தது.
போலிஸாரின் பலத்த பாதுகாப்பின் மத்தியில் இடம்பெற்ற இந்நிகழ்வில் ஒமந்தை பங்கை சேர்ந்த ஏராளமான கிரிஸ்தவ மக்கள்  கலந்து கொண்டிருந்தனர்.

கருத்து தெரிவிக்க