உள்நாட்டு செய்திகள்புதியவை

உண்ணாவிரத போராட்டத்தை முன்னெடுக்கவுள்ள அம்பிட்டிய சுமணரட்ன தேரர்!

தானும் உண்ணாவிரத போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக மட்டக்களப்பு மங்களராம விகாராதிபதி ஸ்ரீ அம்பிட்டிய சுமணரட்ன தேரர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரனால் முன்னெடுக்கப்பட்டுள்ள சுழற்சி முறையிலான உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொண்ட அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அடிப்படை வாதத்திற்கு துணைபோகும் அமைச்சர் ரிஷாட் மற்றும் ஆளுநர்களான ஏ.எல்.எம்.ஹிஸ்புல்லா, அசாத் சாலி, ஆகியோர் உடனடியாக பதவி விலக வேண்டும். இல்லையெனில் அதுரலிய ரத்ன தேரர் உண்ணா விரதத்தை நிறுத்தும்போது தான் உண்ணாவிரதத்தை ஆரம்பிக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

நாட்டுக்கு பிரச்சினை என்று வரும்போது அனைத்து இனங்களும் ஒன்றாக இணைந்து செயற்பட வேண்டும். இந்த செய்தியை சமூகத்திற்கு கொண்டு செல்லவேண்டும். எனவும் சுமணரட்ன தேரர் சுட்டிக்காட்டினார்.

அதுரலிய ரத்ன தேரர் ஆரம்பித்த உண்ணாவிரதம் அரசியல், இன, மத ரீதியானவையோ அல்ல. முஸ்லிம் அடிப்படை வாதிகளுக்கு எதிரானதாகும் என்றும் அவர் தெரிவித்தார்.

கருத்து தெரிவிக்க