இலங்கை

நாளை முதல் ஊரடங்கு உத்தரவினை மீறுவோருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை!

நாளை ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டவுடன் சமூக இடைவெளியை கடைபிடிக்க மறுக்கும் அனைத்து பிரஜைகளும் கைது செய்யப்படுவர் என பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். அத்துடன் , கைது செய்யப்படுபவர்களை ஆறு மாத காலத்திற்கு சிறையில் அடைக்கவும் சட்டத்தில் இடமுண்டு என மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, நாளை முதல் பேரூந்துகளில் ஆசனங்களிற்கு ஏற்ப பயணிகள் ஏற்றப்படுவர் என்றும், ஆசனங்களிற்கு அதிகமாக பயணிகளை ஏற்றிச் செல்வோர் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் போக்குவரத்து துறை அமைச்சர் மகிந்த அமரவீரவும் தெரிவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க