உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவை

ஞானசாரரின் விடுதலை அரசியலமைப்பை மீறும் செயல்

பொதுபலசேனாவின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு பொது மன்னிப்பு வழங்கியதன் ஊடாக அரசியலமைப்பை மீறி ஜனாதிபதி நிறைவேற்று அதிகாரத்தை பயன்படுத்தியுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இலங்கை சட்டத்தரணிகள் சம்மேளனம் இந்தக்குற்றச்சாட்டை சுமத்தியுள்ளது.

இந்த பொதுமன்னிப்பு விடயம் சட்டத்துக்கு உட்பட்ட வகையி;ல் செய்யப்பட்டிருக்கவேண்டும் என்று சம்மேளனம் சுட்டிக்காட்டியுள்ளது.

அத்துடன் தேரரின் விடுதலை, உரிய தீர்ப்பின் அடிப்படையில் மேற்கொள்ளப்படவில்லை என்றும் சம்மேளனத்தின் தலைவர் காலிங்க இந்ததிஸ்ஸ குறிப்பிட்டுள்ளார்.

கருத்து தெரிவிக்க