உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்புதியவை

நீச்சல் குளத்தில் மூழ்கி பொலிஸ் உத்தியோகத்தர் பலி!

பமுனுகம, எலென்எகொட பிரதேசத்திலுள்ள ஹோட்டல் ஒன்றிலுள்ள நீச்சல் குளம் ஒன்றில் மூழ்கி பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
தமது கடமைகளை முடித்துவிட்டு நீச்சல் குளத்தில் குளிப்பதற்காக சென்ற வேளையில் இவ்வாறு நீச்சல் குளத்தில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மிகவும் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னரே குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்த பொலிஸ் உத்தியோகத்தர் 58 வயதான கட்டான பகுதியைச் சேர்ந்தவர் எனவும் தெரிவிக்கப்படுவதோடு இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்து தெரிவிக்க