உள்நாட்டு செய்திகள்புதியவைவடக்கு செய்திகள்

வவுனியாவில் இரண்டு சம்பவங்கள் தொடர்பில் சுவரொட்டிகள்

வவுனியாவில் அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு எதிராக சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.
தமிழ் சிங்கள மொழிகளில் இந்து சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வவுனியா மணிக்கூட்டு கோபுரம் தேக்கவத்தை, மூன்றுமுறிப்பு பகுதிகளில் இவை ஒட்டப்பட்டுள்ளன.


இதேவேளை வர்த்தகர் ஒருவரின் பெயரைக்குறிப்பிட்டு அவருக்கு அவதூறு ஏற்படுத்தும் வகையில் துண்டுபிரசுரங்களை விநியோகித்த பாடசாலை ஒன்றின் இரண்டு மாணவர்கள் நேற்று விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர்.

எனினும் இதன்போது அவர்கள் மன்னிப்புக்கோரியதை அடுத்து எச்சரித்து விடுதலை செய்யப்பட்டனர்.

குறித்த வர்த்தகரினால் காவல்துறையிடம் செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கு அமையவே விசாரணை நடத்தப்பட்டது.

கருத்து தெரிவிக்க