உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவை

சுற்றுலாத்துறையை சீனா மேம்படுத்தும்- தூதுவர் உறுதி

ஏப்ரல் 21 தாக்குதல்களின் பின்னர் நலிவடைந்துள்ள இலங்கையின் சுற்றுலாத்துறையை மேம்படுத்த சீனா முன்வந்துள்ளது.

இதற்கான உறுதிமொழியை சீனத் தூதுவர் செங் சூயாங் நேற்று சுற்றுலாத்துறை அமைச்சர் ஜோன் அமரதுங்கவிடம் வழங்கினார்

கொழும்பில் இடம்பெற்ற சந்திப்பின்போது இந்த உறுதிமொழி வழங்கப்பட்டுள்ளது.

இந்த சந்திப்பில் சுற்றுலாத்துறையின் தற்போதைய நிலைமை தொடர்பில் ஆழமாக விவாதிக்கப்பட்டது.

இந்தநிலையில் இலங்கைக்கு செல்லும் சீன பிரஜைகளுக்காக அறிவிக்கப்பட்டிருந்த சுற்றுலா எச்சரிக்கையை தமது நாடு கடந்த வாரம் விலக்கிக்கொண்டுள்ளதாக சீனத் தூதுவர் தெரிவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க