உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

பொதுமன்னிப்பு பெற்ற ஞானசாரருக்கு மீண்டும் ஒரு வழக்கு

 

பொது மன்னிப்பின் கீழ் விடுதலையாகிய பொதுபல சேனாவின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு எதிராக இன்று மற்றும் ஒரு வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
ஹோமாகம நீதிவான் நீதிமன்றில் இந்த வழக்கு இன்று விசாரணை செய்யப்பட்டது.
எனினும் பிரதிவாதியான ஞானசார தேரர் மன்றுக்கு சமுகம் தராதநிலையில் வழக்கு விசாரணை, 2019 ஒக்டோபர் 21ஆம் திகதிக்கு பிற்போடப்பட்டது.
தென் அதிவேகப்பாதையில் கடமையில் இருந்து காவல்துறை அலுவலர் ஒருவரை கடமையை செய்யவிடாது தடுத்தார் என்ற குற்றச்சாட்டே ஞானசார தேரர் மீது சுமத்தப்பட்;டுள்ளது.

 

கருத்து தெரிவிக்க