உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

இலங்கையில் இருந்து 15 தீவிரவாதிகள்… கேரளாவில் பலத்த பாதுகாப்பு

இலங்கையில் இருந்து சுமார் 15 ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் வந்துள்ளதாக வெளியான தகவலை அடுத்து கேரளாவில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

வெள்ளை நிற படகு ஒன்றில் இவர்கள் இலங்கையில் இருந்து வந்ததாகவும் அவர்களை கேரளக்கரையில் இறங்கவிடாமல் தடுக்கவேண்டும் என்றும் புலனாய்வுத்துறை எச்சரிக்கை விடுத்திருந்தது.

இதனையடுத்து மாநிலத்தின் கரையோரப்பகுதிகளில் விழிப்புக் கண்காணிப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மீனவர்களும் எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

ஈராக் மற்றும் சிரியா ஆகிய நாடுகளில் இருந்து விரட்டப்பட்ட பின்னர், ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் தென்னாசியாவை நோக்கி தமது நடவடிக்கைகளை விரிவுப்படுத்தியுள்ளதாக கேரளாவில் பலரும் நம்புகின்றனர்.

கருத்து தெரிவிக்க