உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்முக்கிய செய்திகள்

நிழல் உலக தாதா மதூஷிடம் அதிரடிப்படை திடீர் விசாரணை

சட்டவிரோத போதைப்பொருள் கடத்தல்காரரான நிழல் உலக தாதா  மாகந்துரே மதூஷிடம், விசேட அதிரடிப்படையினர், நேற்று திடீரென ஒரு மணிநேரம் விசாரணை நடத்தியுள்ளனர்.

முக்கிய சில தகவல்களை திரட்டிக்கொள்வதற்காகவே 9.30 மணிமுதல் 10.30 மணிவரை, குற்றப் புலனாய்வு பிரிவுக்கே வருகைதந்து, விசேட அதிரடிப்படையினர் இவ்வாறு விசாரணை நடத்தியுள்ளனர் என காவல்துறை வட்டாரங்களிலிருந்து தெரியவருகின்றது.

இலங்கையில் இடம்பெற்ற பல்வேறு குற்றச்செயல்களுடன் நேரடியாக தொடர்புபட்ட, தேடப்பட்டுவரும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டிருந்த மாகந்துரே மதூஷ் டுபாயில் வைத்து கைதுசெய்யப்பட்டார்.

விசாரணைகளின் பின்னர் நாடு கடத்தப்பட்ட அவரை, குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தடுத்து வைத்து புலன் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.

 

 

கருத்து தெரிவிக்க