உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்

சஹ்ரானின் சகா- நாடாளுமன்ற அறையில் 2 மணிநேரம் தேடுதல் வேட்டை

தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பின் தலைவர் சஹ்ரானுக்கு உதவினார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள, நாடாளுமன்ற பதிவேட்டு திணைக்கள மூத்த அதிகாரியான மொஹமட் நௌசட் ஜலால்தீன் (42) நேற்று நாடாளுமன்றத்துக்கு கொண்டு வரப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.

அத்துடன், நாடாளுமன்றத்தில் உள்ள அவரது பணி அறையில் சோதனைகள் நடத்தப்பட்டதுடன், அவரது கணினியில் உள்ள பதிவுகளும் இரண்டு மணி நேரமாக ஆய்வு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது.

பலத்த பாதுகாப்புடன் அவர் நாடாளுமன்றத்துக்கு அழைத்து வரப்பட்டிருந்தார். அவரை 3 மாதங்கள் தடுத்து வைத்து விசாரிக்க பாதுகாப்பு அமைச்சு உத்தரவிட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க