உள்நாட்டு செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவைவடக்கு செய்திகள்

புலி சீருடையுடன் உடலின் பாகங்கள் நீதவான் முன்னிலையில் தோண்டி எடுப்பு

முள்ளிவாய்க்கால் மேற்கு பகுதியில் கடந்த 17ஆம் திகதி குழி ஒன்றை தோண்டும் பொது கண்டுபிடிக்கபட்ட விடுதலை புலிகளின் சீருடையுடன் காணப்பட்ட உடலத்தின் எச்சங்களை தோண்டி எடுக்கும் பணி முல்லைத்தீவு மாவட்ட நீதிவான் எஸ் .லெனின்குமார் முன்னிலையில் இன்றுகாலை நடைபெற்றது .
சட்டவைத்திய அதிகாரி, மாவட்ட நீதிவான் ஆகியோரின் முன்னிலையில் இன்று காலை இந்த உடலம் காணப்பட்ட பிரதேசம் அகழ்வு செய்யபட்டு உடலத்தின் எச்சங்கள் மீட்கப்பட்டு உடற்கூற்று பரிசோதனைக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளது .
மண்டையோடு சிதைவடைந்தநிலையில் காணப்பட்ட குறித்த உடலத்தில் இரண்டு குண்டுகள் ,துருப்பிடித்த துப்பாக்கிரவைகள் ,வோக்கி டோக்கி ஒன்றின் சிதைவுகள், இலக்கத்தகடுகள்,சயினைட் குப்பி  ஆகியனவும் மீட்கப்பட்டன.
இந்த உடலை சிதைவில் மீட்க்கபட்ட இலக்கதகட்டில் த.வி.பு  ஐ 2719 என்ற இலக்கம் காணப்படுகின்றது.

கருத்து தெரிவிக்க