இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

நீர் வெட்டு தொடர்பில் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை வெளியிட்டுள்ள அறிக்கை

பியகம நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் மின்சார சபைக்குச் சொந்தமான அமைப்பின் அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் காரணமாக வத்தளை,மஹர பேலியகொட, ஜா-எல, கட்டுநாயக்க, சீதுவை நகர சபைப் பகுதிகள், களனி, பியகம, மஹர, தொம்பே, கட்டான, மினுவங்கொடை மற்றும் கம்பஹா பிரதேச சபைப் பகுதிகளுக்கு நீர் விநியோகம் தடைப்படுமென நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிக்கையொன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.

அதற்கிணங்க குறித்த பகுதிகளில் எதிர்வரும் 27ம் திகதி காலை 08.30 மணி முதல் மாலை 05.00 மணி வரை 8 1/2 மணி நேரம் நீர் விநியோகம் தடைப்படுமென நீர் வழங்கல் சபை தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்து தெரிவிக்க