இந்தியா

தி.மு.க.வை கண்டித்து அ.தி.மு.க ஆர்ப்பாட்டம்

ஓசூர்: தேன்கனிகோட்டை, தளி, கெலமங்கலம், சூளகிரி பகுதியில், தி.மு.க.,வை கண்டித்து, அ.தி.மு.க., சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. பட்டியல் இன மக்களை இழிவாக பேசிய, தி.மு.க.,வை சேர்ந்த பாரதி மற்றும் அவரை கண்டிக்காத ஸ்டாலினை கண்டித்து, தேன்கனிகோட்டை அண்ணா நகரில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. பிரேம்ராஜ் தலைமை வகித்தார். அசேன் ராஜா முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில், 50 க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். அதேபோல், கெலமங்கலம் ஜிபியில், சண்முகம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. தளி ஜெயந்தி காலனியில், அப்பகுதி சிறுபான்மையின தலைவர் வெங்கடேஷ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. சூளகிரி அடுத்த மேலுமலைக் கிராமத்திலும் பாரதியைக் கைதுசெய்ய வலியுறுத்தி, அப்பகுதியினர் மற்றும் அ.தி.மு.க வினர் கோஷம் எழும்பினர்.

கருத்து தெரிவிக்க