வெளிநாட்டு செய்திகள்

நைஜிரியாவில் பயங்கரம் – 10 மீனவர்கள் சுட்டுக்கொலை!

நைஜீரியாவில் போகோ ஹராம் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 10 மீனவர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர் என அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆபிரிக்க நாடான நைஜீரியாவில் சில ஆண்டுகளாக நைஜீரிய அரசினை எதிர்த்து போகோ ஹராம் பயங்கரவாதிகள் வன்முறை செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த அமைப்பின் தற்கொலை படையினர் நடத்திய தாக்குதல்களில் 20,000 பேர் உயிரிழந்துள்ளனர். 2 மில்லியன் மக்கள் இடம் பெயர்ந்துள்ளனர்.  இந்த பயங்கரவாதிகளுக்கும், இராணுவத்திற்கும்டையே அடிக்கடி தாக்குதல்கள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் நேற்று நைஜீரியாவின் வடகிழக்குப் பகுதியில் உள்ள சிறிய நகரமான கொண்டுகா பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் சிலர், அல்லு டாம் பகுதிக்கு மீன் பிடிக்கச் சென்றுள்ளனர். அப்போது திடீரென அங்கு வந்த போகோ ஹராம் பயங்கரவாதிகள், மீனவர்கள் மீது சரமாரியாக தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 10 மீனவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

கருத்து தெரிவிக்க