புதியவைவணிக செய்திகள்

பெருந்தெருக்கள் அபிவிருத்தி திட்டங்கள் குறித்து ஜனாதிபதி கருத்து

நேற்று (அக்டோபர் 16) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற போக்குவரத்து பெருந்தெருக்கள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சின் முன்னேற்ற மீளாய்வுக் கலந்துரையாடலில் பெருந்தெருக்கள் அபிவிருத்தி திட்டங்கள் குறித்து ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க கருத்து தெரிவித்திருந்தார்.

அதற்கிணங்க வீதி அபிவிருத்தி வேலைத்திட்டங்களை ஒழுங்குபடுத்தல் மற்றும் செயற்திறனுடன் முன்னெடுத்தல் என்பன கிராமிய பொருளாதார இலக்குகளை அடைந்துகொள்ள வழிவகுக்குமெனவும் கிராமிய அபிவிருத்தி செயற்பாடுகளை முன்னெடுக்கும்போது பெறுகைச் செயற்பாடுகள் ஒழுங்குமுறைக்கமைய முன்னெடுக்கப்பட வேண்டுமெனவும் ஒரு சிலருக்கு மாத்திரம் ஒப்பந்தங்கள் கிடைப்பதற்கு மாறாக பிரதேச, கிராமிய மக்களுக்கு பலன்கள் கிடைக்கும் வகையில் குறித்த வேலைத்திட்டங்களை தயாரிக்குமாறும் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க வலியுறுத்தினார்.

கருத்து தெரிவிக்க