இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

தங்காலை பிரதேச சபையின் முன்னாள் உப தவிசாளர் கைது

இன்று (அக்டோபர் 15) தங்காலை பிரதேச சபையின் முன்னாள் உப தவிசாளர் போலி இலக்கத்தகடு பொருத்தப்பட்ட ஜீப் ரக வாகனத்தை வைத்திருந்த குற்றச்சாட்டில் தங்காலை காவல்துறை குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அதற்கிணங்க குறித்த போலி இலக்கத்தகடு பொருத்தப்பட்ட ஜீப் ரக வாகனம் பெலியத்த புவக்தண்டாவ பகுதியில் கைவிடப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளதாகவும் அதனுடன் அரசுக்குச் சொந்தமானதென சந்தேகிக்கப்படும் 02 உந்துருளிகளும் 03 ஜீப் ரக வாகனங்களும் மரதகஹமுல்ல பகுதியிலுள்ள திவினெகும களஞ்சிய கட்டடத்தில் கைவிடப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளதாகவும் தங்காலை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கருத்து தெரிவிக்க