உலகம்புதியவைவெளிநாட்டு செய்திகள்

ஏர் இந்தியா விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

இன்று (அக்டோபர் 14) மும்பை – சத்ரபதி சிவாஜி மகராஜ் சர்வதேச விமான நிலையத்திலிருந்து நியூயோர்க் நோக்கிப் புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்திற்கு இனந்தெரியாத நபர்களால் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

அதற்கிணங்க நடுவானில் பறந்து கொண்டிருந்த ஏர் இந்தியா விமானமானது டெல்லிக்கு திருப்பப்பட்டு அவசரமாக தரை இறக்கப்பட்டதாகவும் மேலும் வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்களால் விமானம் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்து தெரிவிக்க