இலங்கை

இலங்கையில் இன்று முதல் ஹோட்டல்களில் திருமண வைபவங்களை நடாத்த அனுமதி.

கொரோனா வைரஸ் தாக்கத்தின் காரணமாக சுமார் மூன்று மாத காலமாக ஹோட்டல்களில் திருமணங்கள் இடம்பெறாமல் இடைநிறுத்தம் செய்யப்பட்டிருந்தது. இருப்பினும் நாடு தற்போது வழமைக்கு திரும்பக் கொண்டிருக்கிருக்கும் நிலையில் இன்றுமுதல் திருமண நிகழ்வுகளை  ஹோட்டல்களில் நடத்த அனுமதி வழங்கப்படும் என சுற்றுலா மற்றும் விமான போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.
மேலும் ஹோட்டல்களில் மூன்றில் ஒரு பங்குடையவர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட வேண்டும் என்றும் அவர்களுக்குள் 1.5 மீற்றர் சமூக இடைவெளியைப் பின்பற்ற வேண்டும் என்றும் அமைச்சின் செயலாளர் சிறிபால ஹெட்டியாரச்சி தெரிவித்துள்ளார்.
மேலும், நாட்டிற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கவும், பல நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அவர் தெரிவித்தார்.கொரோனா தொற்று காரணமாகப் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள சுற்றுலாத் துறையை வாழ்வாதாரமாகக் கொண்டுள்ள மக்களுக்கு நிவாரணத்தை வழங்க அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது எனவும் மேலும் தெரிவித்தார்.

கருத்து தெரிவிக்க