உலகம்புதியவைவெளிநாட்டு செய்திகள்

இந்தியாவை ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினராக்க ஆதரவு

ஐக்கிய நாடுகள் சபையில் பாதுகாப்பு கவுன்சிலில் சபையில் இந்தியா நிரந்தர உறுப்பினராகுவதற்கு இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் ஆதரவு தெரிவித்துள்ளது.

சர்வதேச அளவில் தற்போது மிகப்பெரிய பொருளாதார நாடாக வளர்ந்து வரும் இந்தியாவை ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பு நாடாக்க வேண்டுமென பல்வேறு நாடுகள் கோரிக்கை விடுத்து வருகின்றன.

அதற்கிணங்க இங்கிலாந்து பிரதமர் கேர் ஸ்டாமர் மற்றும் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் ஆகியோர் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா நிரந்தர உறுப்பினராக்குவதற்கு ஆதரவு தெரிவித்துள்ளனரென தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்து தெரிவிக்க