இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு

ஈ-விசா வழங்கும் நடவடிக்கையை இரண்டு தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்கும் தீர்மானத்திற்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட இடைக்கால தடை உத்தரவை நடைமுறைப்படுத்த தவறியதன் மூலம் நீதிமன்றத்தை அவமதித்ததாக குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளரான எச். இலுக்பிட்டிய மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

அதற்கிணங்க குறித்த வழக்கு இன்று (செப்டம்பர் 25) நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுக்கப்பட்டு குற்றப்பத்திரிகை வாசிக்கப்பட்டதை அடுத்து குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளரான எச்.இலுக்பிடியவை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தவிட்டுள்ளது.

மேலும் குறித்த மனு ஜனவரி 22ம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க