இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

தனியார் துறையினரின் அடிப்படை சம்பளம் அதிகரிப்பு

நேற்று (செப்டம்பர் 11) தொழிலார்களின்
எதிர்கால வைப்பு நிதி, ஊழியர் நம்பிக்கை நிதி மற்றும் பணிக்கொடைக்கான கொடுப்பனவுகளை வைப்பிலிடும்போது 21,000 ரூபாய் குறைந்தபட்ச சம்பளமாக கருதப்பட வேண்டுமென்று தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு ஊடக அறிக்கையொன்றின் மூலம் தெரிவித்திருந்தது.

அதற்கிணங்க நேற்று (செப்டம்பர் 11) சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தனியார் துறை ஊழியர்களுக்கான குறைந்தபட்ச அடிப்படை சம்பளத்தை 21,000 ரூபாவாக மாற்றும் சட்டமூலத்தில் கையொப்பமிட்டிருந்தார்.

கருத்து தெரிவிக்க