Uncategorizedஇலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

ஜனாதிபதித் தேர்தல் வாக்கெண்ணும் நடவடிக்கைக்காக முன்கூட்டியே மூடப்படும் கிழக்கின் பாடசாலைகள்

ஜனாதிபதித் தேர்தலின் வாக்கு எண்ணும் நடவடிக்கைகள் இடம்பெறவுள்ளதால் கிழக்கு மாகாணத்திலுள்ள திருகோணமலை
மற்றும் மட்டக்களப்பின் பாடசாலைகள் முன்கூட்டியே மூடப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதற்கிணங்க திருகோணமலை மாவட்டத்தில் வாக்கு எண்ணும் நிலையமாகப் பயன்படுத்தப்படும் விபுலானந்த மகா வித்தியாலயமும் மட்டக்களப்பு மாவட்டத்தில் வாக்கு எண்ணும் நிலையமாகப் பயன்படுத்தப்படும் இந்து வித்தியாலயமும் இன்று (செப்டம்பர் 11) மூடப்பட்டு எதிர்வரும் 24ம் திகதி திறக்கப்படுமென மாகாணக் கல்விச் செயலாளர் எச்.ஈ.எம்.ஜி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

மேலும் வாக்களிப்பு நிலையங்களாக பயன்படுத்தப்படும் ஏனைய பாடசாலைகள் எதிர்வரும் 20ம் திகதி மூடப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க