உலகம்புதியவைவெளிநாட்டு செய்திகள்

ஒலிம்பிக் வீராங்கனை ரெபேக்கா செப்டேஜி உயிரிழப்பு

2024 பாரிஸ் ஒலிம்பிக்கில் தொலைதூர ஓட்டப்பந்தயத்தில் 44 வது இடத்தைப் பிடித்த வீராங்கனையான ரெபேக்கா செப்டேஜி மேற்கு டிரான்ஸ் நஸோயா கவுண்டியிலுள்ள அவரது வீட்டில் காதலனுடன் ஏற்பட்ட தகராறில் ரெபேக்கா செப்டேஜியின் காதலன் ரெபேக்கா செப்டேஜி மீது செப்டம்பர் முதலாம் திகதி பெற்றோல் ஊற்றி கொலை செய்ய முற்பட்டுள்ளார்.

இச்சம்பவத்தில் தீக்காயங்களுக்குள்ளான இருவரும் எல்டோரெட் நகரிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று (செப்டம்பர் 05) சிகிச்சை பலனின்றி ரெபேக்கா செப்டேஜி உயிரிழந்துள்ளாரென உகாண்டா தடகள கூட்டமைப்பு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க