இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

வாக்காளர் அட்டை விநியோகம் தொடர்பில் வெளியான தகவல்

எதிர்வரும் 21ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்கான உத்தியோகப்பூர்வமான வாக்காளர் அட்டைகள் விநியோகம் தொடர்பில் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதற்கிணங்க  ஜனாதிபதி தேர்தலுக்கான உத்தியோகப்பூர்வ வாக்காளர் அட்டைகள் இன்று (செப்டம்பர் 03) அஞ்சல் திணைக்களத்திடம் கையளிக்கப்படவுள்ளதோடு எதிர்வரும் செப்டம்பர் 14ம் திகதி வரை வீடுகளுக்கு விநியோகிக்கப்படுமென தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது .

அத்தோடு செப்டம்பர் 08ம் திகதி வாக்காளர் அட்டைகளை விநியோகிப்பதற்கான விசேட தினமாக அறிவிக்கப்பட்டுள்ளதோடு அதற்காக 8000 பேரை கடமைகளில் ஈடுபடுத்துவதற்கு எதிர்பார்ப்பதாக சிரேஷ்ட பிரதி அஞ்சல்மா அதிபர் ராஜித ரணசிங்க தெரிவித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன.

கருத்து தெரிவிக்க