இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவை

துப்பாக்கி ரவையுடன் விமானப்படை பெண் சிப்பாய் கைது

கடந்த ஓகஸ்ட் 31ம் திகதி கட்டுநாயக்க விமான நிலையத்தில் T -56 ரக துப்பாக்கி ரவையுடன் குருநாகல் நிகதலுபொத்த ஹிரிபிட்டிய பிரதேசத்தில் வசிக்கும் 37 வயதுடைய ஓய்வுபெற்ற பெண் விமானப்படை சிப்பாய் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த ஓய்வுபெற்ற பெண் விமானப்படை சிப்பாய் டுபாய் செல்வதற்கு கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகை தந்த போது அவரது கைப்பையிலிருந்து குறித்து துப்பாக்கி ரவை கண்டெடுக்கப்பட்டுள்ளதோடு துப்பாக்கி ரவை கைப்பையில் வந்தது எவ்வாறென்பது தெரியவில்லை என்று தெரிவித்த போதிலும்கூட மேலதிக விசாரணைக்காக ஓய்வு பெற்ற பெண் விமானப்படை சிப்பாய் கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

கருத்து தெரிவிக்க