இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

இலங்கை முகநூல் பயனாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

கடந்த சில நாட்களாக முகநூல் ஆதரவுக் குழுக்கள் போன்று பாவனை செய்து மக்களின் தனிப்பட்ட தகவல்களை திருடும் மோசடி சம்பவம் இடம்பெற்று வருவதாக இலங்கை கணினி அவசர பிரிவு தெரிவித்துள்ளது.

அதற்கிணங்க நேற்று (ஓகஸ்ட் 12) முகநூல் ஆதரவுக் குழுக்கள் போன்று பாவனை செய்து மக்களின் தனிப்பட்ட தகவல்களை திருடும் மோசடி சம்பவம் குறித்து 08 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக இலங்கை கணினி அவசர பிரிவின் சிரேஷ்ட தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் சாருக தமுனுகல தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக முகநூலில் தனிப்பட்ட தகவல்களை பகிர்வதை தற்காலிகமாக இடைநிறுத்தும் படி முகநூல் பாவனையாளர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க