புதியவைவெளிநாட்டு செய்திகள்

கத்திக்குத்து சம்பவத்தை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள்!

கடந்த 30அம் திகதி பிரித்தானியா-சவுத்போர்ட் பகுதியில் நடந்த கொடூர கத்திக்குத்து சம்பவத்தில் கோடைகால முகாமில் கலந்து கொண்ட மூன்று சிறுவர்கள் பரிதாபமாக கொல்லப்பட்டதுடன் மேலும், 8 சிறுவர்கள் காயங்களுடன் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

குறித்த தாக்குதல் சம்பவத்தில் உயிரிழந்த மற்றும் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்காக நீதி கோரி அந்நாட்டு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அத்துடன் வீதிகளில் திரண்ட போராட்டக்காரர்கள் பொலிஸாருடன் மோதலில் ஈடுபட்டுள்ளதில் அப்பகுதியில் பரபரப்பு நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கருத்து தெரிவிக்க