புதியவைவணிக செய்திகள்

இலங்கை பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றம் குறித்து கருத்து

விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சில் இடம்பெற்ற பெருந்தோட்ட பிரிவின் முன்னேற்றம் தொடர்பான கலந்துரையாடலின் போது தேயிலை, இறப்பர், தென்னை, கறுவா மற்றும் மிளகு போன்ற பெருந்தோட்டப் பயிர்களின் ஏற்றுமதியினூடாக 2024 ஜனவரி மாதம் முதல் ஏப்ரல் வரையான காலப் பகுதியில் நாட்டிற்கு 1118.06 மில்லியன் டொலர்கள் ஏற்றுமதி வருமானம் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த வருடம் (2023) ஜனவரி மாதம் முதல் ஏப்ரல் வரையிலான காலப் பகுதியில் நாட்டிற்கு 884.6 மில்லியன் டொலர்கள் பெருந்தோட்ட பயிர்களினால் ஈட்டப்பட்டுள்ளதாகவும் கடந்த வருடத்தை விட இவ்வருடம் 234 மில்லியன் டொலர்கள் வருமானம் முதல் நான்கு மாதங்களுக்குள் பெற முடிந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க