புதியவைவணிக செய்திகள்

தேயிலை கைத்தொழில் குறித்து ஜனாதிபதி கருத்து

நேற்று (ஜூலை 25) கொழும்பு சினமன் கிரேண்ட் ஹோட்டலில் ஆரம்பமான கொழும்பு சர்வதேச தேயிலை மாநாட்டில் கலந்து கொண்ட ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தேயிலை கைத்தொழில் குறித்து கருத்து தெரிவித்தார்.

அதற்கிணங்க ஏற்றுமதி பொருளாதாரத்தை நோக்கி இலங்கையை நகர்த்த இலங்கை தேயிலை கைத்தொழிலை அனைத்து பரிமாணங்களிலும் ஊக்குவிக்க வேண்டுமெனவும் அதற்கான முதல் வேலைத்திட்டமாக அரச மற்றும் தனியார் துறைகளுடன் இணைந்து செயற்படுத்தப்பட வேண்டுமெனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்திருந்தார்.

அதனடிப்படையில் சிலோன் டீ உலகின் முன்னணி வர்த்தக நாமமாகத் திகழ்வதாகவும் அதனை புதிய மூலோபாய வேலைத்திட்டத்தினூடாக மேலும் ஊக்குவிக்க வேண்டுமெனவும் குறிப்பிட்டிருந்தார்.

கருத்து தெரிவிக்க