புதியவைவணிக செய்திகள்

சிறுபோக நெற்செய்கை விவசாயிகளுக்கு நிதி உதவி

கிளிநொச்சியில் சிறுபோக நெற்செய்கையில் ஈடுபடும் விவசாயிகளுக்கு பசளை மானியத்திற்கான பணம் வைப்பில் இடப்பட்டுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட கமநல அபிவிருத்தி திணைக்கள பிரதி ஆணையாளர் பா.தேவரதன் தெரிவித்துள்ளார்.

அதற்கிணங்க கிளிநொச்சி மாவட்டத்தில் சிறுபோக நெற்செய்கையில் ஈடுபடும் 09 ஆயிரத்து 91 விவசாயிகளுக்கு குறித்த பசளை மானியத்திற்கான பணம் வைப்பிலிடப்பட்டுள்ளதோடு 09 கமநல சேவை நிலையங்களின் கீழுள்ள விவசாயிகளுக்கு 07 ஆயிரத்து 272.35 ஏக்கர் நிலப்பரப்புக்கான பணம் வைப்பிலிடப்பட்டுள்ளதாகவும் பா.தேவரதன் தெரிவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க