இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

தேர்தல் ஆணைக்குழுவிற்கு எழுத்துமூல அறிவித்தல் விடுத்துள்ள விஜயதாச ராஜபக்

தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு
நீதித்துறை சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ எழுத்துமூல அறிவித்தலொன்றை விடுத்துள்ளார்.

குறித்த எழுத்துமூல அறிவித்தலில் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்காக 2023ம் ஆண்டு 03ம் இலக்க தேர்தல் செலவுகள் ஒழுங்குமுறைச் சட்டத்தின் கீழ் அதிகாரங்களைப் பிரயோகிக்குமாறு கூறப்பட்டுள்ளதுடன் பாராளுமன்றத் தேர்தலின் போது சட்டவிரோதமான செயல்கள், இலஞ்சம், கப்பம் பெறுதல் போன்ற சம்பவங்களுக்கு தற்போதைய விகிதாசார தேர்தல் முறையின் கீழ் சட்டம் செயலிழந்துள்ளது குறித்தும் அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ தன் எழுத்துமூல அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் எதிர்வரும் தேர்தலுக்கு 2023 ஆம் ஆண்டு 03 ஆம் இலக்க தேர்தல் செலவுகள் ஒழுங்குமுறைச் சட்டத்தை அமுல்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுப்பதாக அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க