புதியவைவிளையாட்டு செய்திகள்

கனிஷ்ட தேசிய மெய்வல்லுநர் சாம்பியன்ஷிப்!

இன்று (13) முதல் (16)ஆம் திகதி வரை தியகம மஹிந்த ராஜபக்ஷ விளையாட்டரங்கில், வடக்கு, கிழக்கு, மலையகம் உட்பட நாட்டின் சகல பாகங்களிலிருந்தும் 15,18,20,23 வயதுக்குட்பட்ட 2,000க்கும் மேற்பட்ட வீர, வீராங்கனைகளின் திறமைகளைப் பரீட்சிக்கும் கனிஷ்ட தேசிய மெய்வல்லுநர் சம்பியன்ஷிப்பில் 100க்கும் மேற்பட்ட போட்டி நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும், ஶ்ரீலங்கா அத்லெட்டிக்ஸ் தலைவர் ஜெனரல் பாலித்த பெர்னாண்டோ, உலக கனிஷ்ட மெய்வல்லுநர் சாம்பியன்ஷிப்புக்கான திறன்காண் போட்டியாகவும் அமைந்துள்ளதாகவும் அனைவரும் பங்குபற்றுவது கட்டாயம் எனவும் தெரிவித்துள்ளார்.உலக கனிஷ்ட மெய்வல்லுநர் சாம்பின்ஷிப் போட்டி ஆகஸ்ட் (27) முதல் (31)ஆம் திகதி வரை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க