உள்நாட்டு செய்திகள்

களத்தில் இறங்கினார் பிரதமர் – அறிக்கை சமர்ப்பிக்குமாறும் உத்தரவு

பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று முற்பகல் குருணாகல் மாவட்டத்திலுள்ள பண்டுகவஸ்நுவர, கொட்டம்பிட்டிய, குளியாபிட்டிய, கரந்திபொல ஆகிய பிரதேசங்களுக்கு கண்காணிப்பு பயணம் மேற்கொண்டார்.

வன்முறையின்போது சேதமாக்கப்பட்ட கொட்டம்பிட்டிய முஸ்லிம் பள்ளிவாசலுக்கும் விஜயம் செய்ததுடன், பிரதேச மக்களுடனும், சமயத் தலைவர்களுடனும் பிரதமர் கலந்துரையாடினார்.

குருணாகல் மாவட்டத்தில் நடைபெற்ற சம்பவங்கள் தொடர்பில் தனக்கு விரிவானதொரு அறிக்கையை சமர்ப்பிக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பிரதமர் பணிப்புரை விடுத்துள்ளார்.

அமைச்சர்களான கபீர் ஹாஸிம், ரவூப் ஹக்கீம், ரவி கருணாநாயக்க, அகிலவிராஜ் காரியவசம், நாடாளுமன்ற உறுப்பினரான துஷார இந்துநில் உள்ளிட்ட பலரும் பிரதமருடன் சென்றிருந்தனர்.

கருத்து தெரிவிக்க