உலகம்புதியவைவெளிநாட்டு செய்திகள்

பிலிப்பைன்சில் நிலநடுக்கம்

இன்று (ஜூலை 11) தெற்கு பிலிப்பைன்சின் சுல்தான் குடாரத் மாகாணத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக பிலிப்பைன்ஸ் எரிமலை மற்றும் நில அதிர்வு ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதற்கிணங்க இந்நிலநடுக்கமானது 6.5 ரிக்டராக பதிவாகிய பின்னர் 7.1ஆக உயர்வடைந்ததென அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்நிலநடுக்கமானது மிண்டானாவோவ் டவாவோ,சாராங்கனி, ஆக்சிடெண்டல், டாவோ ஓரியண்டல், டாவோ டி ஓரோ, டாவோ டெல் நோர்டே மற்றும் கோடாபாடோ ஆகிய இடங்களிலும் உணரப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்து தெரிவிக்க