இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

அதுருகிரிய துப்பாக்கிதாரிகள் தப்பிச்சென்ற வேன் கண்டுபிடிப்பு

நேற்று (ஜூலை 08) அதுருகிரிய நகரில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தை மேற்கொண்ட துப்பாக்கிதாரிகள் தப்பிச்செல்ல பயன்படுத்திய வேன் புலத்சிங்கள அயகம தெல்மெல்ல பிரதேசத்திலுள்ள பாழடைந்த காணியொன்றினிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

நேற்று (ஜூலை 08) மாலை 06.15 மணியளவில் 119 அவசர இலக்கத்திற்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கிணங்க குறித்த வேன் அயகமவிலிருந்து புலத்சிங்கள நோக்கி பயணித்துள்ளமை தெரியவந்துள்ளது.

மேலும் குறித்த வேனின் முன் பின் இலக்கத்தகடுகள் இல்லையெனவும் அத்தோடு வருமான அனுமதிப்பத்திரத்தின் பிரதியொன்று வேனின் முன் கண்ணாடியில் ஒட்டப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்து தெரிவிக்க