இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

அதுருகிரிய துப்பாக்கிச்சூடு தொடர்பில் தற்போது கிடைத்த தகவல்

இன்று (ஜூலை 08 )அதுருகிரிய நகரில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் பிரபல உள்ளூர் பாடகி கே.சுஜீவா உட்பட ஆறு பேர் காயமடைந்திருந்தனர்.

அவர்களுள் 55 வயதான சுரேந்திர வசந்த பெரேரா எனும் வர்த்தகரும் 38 வயதான நபரொருவரும் உயிரிழந்துள்ளதோடு ஏனைய நால்வருள் இருவர் தற்போது தீவிர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாகவும் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் டொக்டர் ருக்ஷான் தெரிவித்துள்ளார்.

இதில் காயமடைந்த பிரபல பாடகி கே.சுஜீவா மற்றும் ஆணொருவரும் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்ற நிலையில் மற்றைய இரு பெண்கள் ஹோமாகம வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இத்துப்பாக்கிச்சூட்டினை நடத்தியவர்கள் காரில் வருகை தந்தவர்களெனவும் அவர்கள் இரு T56 துப்பாக்கிகளைப் பயன்படுத்தியுள்ளார்களென காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.

எவ்வாறாயினும், அத்துகிரிய துப்பாக்கிச் சூட்டுக்கு வந்ததாக சந்தேகிக்கப்படும் கார் கடுவெல, கொரத்தோட்ட பிரதேசத்தில் கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்டதுடன் கொலையாளிகள் காரை வீதியில் விட்டுவிட்டு வேனில் தப்பிச் செல்வதைக் காணமுடிந்ததெனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்து தெரிவிக்க