உலகம்புதியவைவெளிநாட்டு செய்திகள்

நேபாளத்தில் வெள்ளப்பெருக்குடன் நிலச்சரிவு

நேபாளத்தில் கடந்த 4 நாட்களாக பெய்து வரக்கூடிய கனமழை காரணமாக வெள்ளத்துடன் கூடிய நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது.

இவ்வனர்த்தத்தினால் 14 பேர் உயிரிழந்துள்ளதோடு 9 பேர் காணாமல் போயுள்ளனர். மேலும்
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளிலுள்ள பொதுமக்களை மீட்கும் பணியில் பேரிடர் மீட்புப் படையினர் ஈடுபட்டு வருகின்றனரெனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்து தெரிவிக்க