இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

அரச ஊழியர்கள் வேலைநிறுத்தம்

200க்கும் மேற்பட்ட அரச சேவை சங்கங்கள் இன்றும் (ஜூலை 08) நாளையும் (ஜூலை 09) சுகயீன விடுமுறையை அறிவித்துள்ளதுடன் தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளன.

அதற்கிணங்க இத்தொழிற்சங்க நடவடிக்கைகளில் கிராம உத்தியோகத்தர்கள், நில அளவையாளர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், அஞ்சல் ஊழியர்கள் உட்பட பல அரச சேவை தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து முன்னெடுக்கவுள்ளதாக அரச மற்றும் மாகாண அரச சேவை தொழிற்சங்கங்களின் ஒன்றியத்தின் இணை அழைப்பாளர் சந்தன சூரியஆராச்சி தெரிவித்துள்ளார்.

மேலும் நாளை(ஜூலை 09) சசுகயீன விடுமுறையை அறிவிப்பதற்கு ஆசிரியர்,அதிபர் சங்கங்களும் தீர்மானித்துள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க