உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

மிளகுசேனை தோட்டத்தில் தீப்பரவல்!

நேற்றிரவு தலவாக்கலையின் லிந்துல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மிளகுசேனை தோட்டத்தில் ஏற்பட்ட தீ பரவல் சம்பவத்தில் மிளகுசேனை தோட்டத்தின் முதலாம் இலக்க நெடுங்குடியிருப்பின் 4 வீடுகளின் கூரைகள் முற்றாகத் தீயினால் சேதமடைந்துள்ளதுடன் மக்களின் உடைமைகள் பெருமளவில் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த விபத்து மின் கசிவின் காரணமாக ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க