உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

டெங்கு நோய் பரவும் அபாயம்!

தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு, மேல் மற்றும் வட மாகாணங்களில் டெங்கு நோய் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது.

அத்துடன், இவ்வருடத்தின் ஜனவரி மாதத்திலிருந்து ஜூன் மாதம் வரையான காலப்பகுதிக்குள் 28,239 டெங்கு நோயார்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் கொழும்பு மாவட்டத்தில் 6,344 டெங்கு நோயாளர்களும், யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 3,974 டெங்கு நோயாளர்களும், கம்பஹா மாவட்டத்தில் 2,820 டெங்கு நோயாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், 10 டெங்கு மரணங்கள் பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கருத்து தெரிவிக்க