புதியவைவணிக செய்திகள்

விவசாயப்பொருட்களை புகையிரதத்தினூடாக ஏற்றிச்செல்ல விசேட நடவடிக்கை

உலக வங்கியின் உதவியுடன் பெலியத்தையிலிருந்து மருதானைக்கு புகையிரதத்தினூடாக விவசாயப்பொருட்களை ஏற்றிச்செல்லும் விசேட வேலைத்திட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.

இவ்வேலைத்திட்டத்திற்கான புகையிரத முன்பதிவினை வாய்ப்பு செயலி மற்றும் தொலைபேசி அவசர அழைப்புக்களினூடாக பெற்றுக்கொள்ள முடியுமென புகையிரத திணைக்களம் அறிவித்துள்ளது.

மேலும் இத்திட்டம் நடைமுறைக்கு வருவதனூடாக விவசாயிகள் தங்கள் விவசாய பொருட்களை நியாயமான விலையில் விற்பனை செய்யவும் அறுவடைக்கு பின் ஏற்படும் சேதங்களை குறைத்துக்கொள்ளவும் முடியுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கிணங்க இவ்வேலைத்திட்டமானது எதிர்வரும் ஜூன் 29ம் திகதி முன்னெடுக்கப்படவுள்ளதாக புகையிரத திணைக்களம் அறிவித்துள்ளது.

கருத்து தெரிவிக்க