இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

மன்னாரில் கோர விபத்து 

நேற்று (ஜூன் 21) கல்முனையிலிருந்து மன்னார் மறிச்சுக்கட்டி நோக்கி பயணித்த வாகனமொன்று முருங்கன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இசைமாலைத்தாழ்வுப்பகுதியில் மின்கம்பத்தில்  மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இவ்விபத்தில் வாகனத்தில் பயணித்த 14 பேர் காயமடைந்துள்ளதோடு அவர்கள்  முருங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு அவர்களில் 07 பேர் மேலதிக சிகிச்சைகளுக்காக மன்னார் பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

இவ்விபத்தில்  வயோதிப பெண்ணொருவர் சிகிச்சைப்பலனின்றி உயிரிழந்துள்ளாரென தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்விபத்து  தொடர்பான  மேலதிக விசாரணைகளை முருங்கன் பொலிஸார்  மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்து தெரிவிக்க