இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

உயர்தரப் பரீட்சை குறித்து வெளியான முக்கிய அறிவிப்பு

2024 ஆம் ஆண்டிற்கான க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குரிய விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதாக பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதனடிப்படையில் உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள பரீட்சார்த்திகள் ஜீன் 20ம் திகதி முதல் நிகழ்நிலையினூடாக விண்ணப்பிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கிணங்க ஜீலை மாதம் 10 ஆம் திகதி வரை விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் என பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர அறிவித்துள்ளார்.

விண்ணப்பப் படிவங்களை பூர்த்தி செய்வதற்கான அறிவுறுத்தல்களை பரீட்சைத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.doenets.lk அல்லது www.onlineexams.gov.lk/eic மூலம் விண்ணப்பங்களையும் சமர்ப்பிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க